இலங்கை சட்ட ஒழுங்கில்லாத நாடாக மாறியுள்ளது! -ஐக்கிய தேசிய கட்சி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை சட்ட ஒழுங்கில்லாத நாடாக மாறியுள்ளது! -ஐக்கிய தேசிய கட்சி


இலங்கை ஒழுங்கில்லாத நாடாக மாறியுள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்க பண்டார தெரிவித்துள்ளார்.


சட்டத்தை அனைவருக்கும் பொதுவான விதத்தில் அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


ஒரு நாடு ஒரு சட்டம் என்பதை நடைமுறைப்படுத்தப் போவதாக தெரிவித்துக் கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தெரிவு செய்யப்பட்ட விதத்தில் சட்டத்தினை நடைமுறைப்படுத்துகின்றது. அதிகாரம் மிக்கவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


சட்டமா அதிபர் திணைக்களம் இலஞ்ச ஊழல்கள் ஆணைக்குழு போன்ற சுயாதீன அமைப்புகளின் சுதந்திரத்திற்கு அரசாங்கம் சவால் விடுத்துள்ளது என குறிப்பிட்டுள்ள பாலித ரங்க பண்டார அரசாங்கத்துடன் தொடர்புள்ளவர்களிற்கு எதிரான பல வழக்குகள் விலக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.


இதன் காரணமாக மக்கள் சட்ட நடவடிக்கைகளின் மீது நம்பிக்கை இழந்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.