இலங்கை ஒழுங்கில்லாத நாடாக மாறியுள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்க பண்டார தெரிவித்துள்ளார்.
சட்டத்தை அனைவருக்கும் பொதுவான விதத்தில் அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஒரு நாடு ஒரு சட்டம் என்பதை நடைமுறைப்படுத்தப் போவதாக தெரிவித்துக் கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தெரிவு செய்யப்பட்ட விதத்தில் சட்டத்தினை நடைமுறைப்படுத்துகின்றது. அதிகாரம் மிக்கவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டமா அதிபர் திணைக்களம் இலஞ்ச ஊழல்கள் ஆணைக்குழு போன்ற சுயாதீன அமைப்புகளின் சுதந்திரத்திற்கு அரசாங்கம் சவால் விடுத்துள்ளது என குறிப்பிட்டுள்ள பாலித ரங்க பண்டார அரசாங்கத்துடன் தொடர்புள்ளவர்களிற்கு எதிரான பல வழக்குகள் விலக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக மக்கள் சட்ட நடவடிக்கைகளின் மீது நம்பிக்கை இழந்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.