தனிமைப்படுத்தல் விதிமுறைகளில் சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ள மாற்றங்கள்! விபரம் உள்ளே

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தனிமைப்படுத்தல் விதிமுறைகளில் சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ள மாற்றங்கள்! விபரம் உள்ளே


கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் நபர்களை சிகிச்சை நிலையங்களில் இருந்து வெளியேற்றும் நடைமுறையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.


இதன்படி புதிய திருத்தங்களுடனான புதிய சுற்றுநிருபம் உரிய தரப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


சுகாதார கட்டமைப்பின் தற்போதைய திறன், ஆய்வுகூடங்களின் கண்டறிவதற்கான வளங்கள் மற்றும் தொற்று நோயின் தற்போதைய நிலைமை ஆகியவற்றை கருத்திற்கொண்டு நோயாளர்களை அடையாளம் காண வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


இதற்கமைய,


1. தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவர் அறிகுறிகள் அற்ற நிலையில் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்படும் சந்தர்ப்பம்

2. அறிகுறிகளுடன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி அற்ற நபர்கள் அடையாளம் காணப்படும் சந்தர்ப்பம்

3. அறிகுறிகளுடன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட கணிசமான நோயெதிர்ப்பு சக்தி உடைய நபர்கள் அடையாளம் காணப்படும் சந்தர்ப்பம்


ஆகிய மூன்று அடிப்படைகளின் கீழ் இந்த நடைமுறை மேற்கொள்ளப்படவுள்ளது.


இந்நிலையில், முதலாவது மற்றும் இரண்டாவது பிரிவுகளின் கீழ், கொரோனா தொற்று சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பப்படும் நபர்களுக்கு, குறிப்பிட்ட காரணிகளின் அடிப்படையில் 14 நாள் தனிமைப்படுத்தல் அவசியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன்படி, குறிப்பிட்ட காரணிகளின் அடிப்படையில் அடையாளம் காணப்படும் நபர்களை 10 நாட்கள் மாத்திரம், கொரோனா தொற்று சிகிச்சை நிலையங்களில் சிகிச்சைக்கு உட்படுத்தவும், ஏனைய 04 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.