பாதாள உலகக் குழு உறுப்பினர் ‘பெரல் சங்க’ பேலியகொடவில் வைத்து கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாதாள உலகக் குழு உறுப்பினர் ‘பெரல் சங்க’ பேலியகொடவில் வைத்து கைது!


பாதாள உலகக் குழு உறுப்பினரான ஹேரத் முதியங்சலாகே பிரபாத் மதுசங்க எனும் ‘பெரல் சங்க’ பேலியகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


பேலியகொட, கெமுனு மாவத்தையில் வைத்து இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினார்.


$ads={2}


பெரல் சங்கவை கைது செய்யும்போது அவரிடமிருந்து 4 கிராம் 130 மில்லி கிராம் ஹெரோயின் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.


ஆயுதங்களை காண்பித்து அச்சுறுத்தியமை, போதைப்பொருள் விநியோகம், கப்பம் கோரல், கொள்ளை மற்றும் கொலை போன்ற பல்வேறு குற்றங்கள் தொடர்பில் பெரல் சங்க மீது குற்றச்சாட்டுக்கள் உள்ள நிலையிலேயே நேற்று (20) அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


இந்நிலையில் கைது செய்யப்பட்ட அவரை பேலியகொட பொலிஸார், புதுக்கடை 5 ஆம் இலக்க நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்த நிலையில், அவரை எதிர்வரும் பெப்ரவரி 03 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.