தொழில் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தொழில் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிக்கை!

கொழும்பு, நாரஹென்பிட்டியில் அமைந்துள்ள தொழிலாளர் செயலகத்திற்கு வருகைதருவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்குத் தொழில் ஆணையாளர் நாயகம் சட்டத்தரணி பிரபா சந்திரகீர்த்தி பொதுமக்களுக்குக் கோரிக்கை விடுத் துள்ளார்.


$ads={2}

ஊழியர் சேமலாப நிதியத்தின் பிரதிபலன்களைப் பெற்றுக்கொள்வதற்காகவும், அதற்கான விண்ணப் பப்படிவங்களை ஒப்படைப்பதற்காகவும் கொழும்பு நாரஹென்பிட்டி தொழிலாளர் செயலகத்திற்கு வரு வதைத் தவிர்ந்துகொள்ளுமாறு தொழில் ஆணையாளர் நாயகம் பொதுமக்களைக் கேட்டுள்ளார்.

கொரோனா தொற்றுக் காரணமாகக் கூடுதலான மக் களைப் பிரதான அலுவலகத்திற்கு வருவதைத் தடுக்கும் நோக்கமாக ஊழியர் சேமலாப நிதியத்தின் கொடுப் பனவுகளுடன் சம்பந்தப்பட்ட அனைத்து நடவடிக் கைகளையும் நாடு பூராகவும் உள்ள மாவட்ட மற்றும் வலய அலுவலகங்களில் மேற்கொள்ள ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் தெரி வித்துள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.