கண்டி - தேசிய வைத்தியசாலையில் கொரோனா உடலை அகற்றக்கோரி கடமை இடைநிறுத்தம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கண்டி - தேசிய வைத்தியசாலையில் கொரோனா உடலை அகற்றக்கோரி கடமை இடைநிறுத்தம்!


கண்டி தேசிய வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்தின் அனைத்து பணியாளர்களும், இன்றைய தினம் தமது கடமைகளில் இருந்து விலகி செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த ஒருவரின் சடலம் கடந்த பல வாரங்களாக குளிரூட்டப்பட்டு வைக்கப்பட்டுள்ள நிலையில், அதனை அகற்றுமாறு அதிகாரிகளுக்கு தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


$ads={2}


இதன்காரணமாக  சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பணியாளர்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக குறித்த அலுவலகத்தின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


இந்த நிலையிலே, இந்த விடயத்திற்கு தீர்வு காணப்படவேண்டுமென வலியுறுத்தியே தாம் தமது கடமைகளில் இருந்து விலகி செயற்படவுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.