க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி தொடர்பான அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி தொடர்பான அறிவிப்பு!


2020ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை எதிர்வரும் மார்ச் மாதக் கடைசியிலோ அல்லது ஏப்ரல் முற்பகுதியிலோ வெளியிடப்போவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.


நேற்று (05) கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.


$ads={2}


இதன் பிரகாரம், பல்கலைக்கழக அனுமதிக்கான தேவைகளை குறுகிய காலத்திற்குள் நிறைவேற்றி, காலம் தாழ்த்தாமல் மாணவர் அடையக்கூடிய இழப்புக்களை சீர் செய்யப்போவதாக கல்வியமைச்சர் குறிப்பிட்டார்.


கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மார்ச் மாதம் வரை பிற்போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாணவர்களுக்கு எதுவித காலதாமதமும் ஏற்படாத வகையில் பெறுபேறுகளை விரைவாக வெளியிடப் போவதாகவும், உயர்தர வகுப்புக்களை ஜூலை மாதத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளன.


மேல் மாகாணத்திலும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களிலும் உள்ள பாடசாலைகளைத் தவிர நாட்டின் ஏனையை பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளை திங்கட்கிழமை  மீளவும் திறப்பதற்கு கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.


தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் பிரிவுகளில் உள்ளவற்றைத் தவிர, மேல் மாகாணத்தைச் சேர்ந்த ஏனைய பாடசாலைகளில் தரம் 11 ற்கான வகுப்புக்களை எதிர்வரும் 25ஆம் திகதி ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


மேலும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள சாதாரண தரப் பரீட்சைக்கு முன்னதாக மாணவர்களுக்கான பாடத்திட்டங்களைப் பூர்த்தி செய்வது இதன் நோக்கமாகும்.


$ads={1}


அதேவேளை, இவ்வாண்டுக்குரிய பாடப்புத்தகங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.