மாவட்டங்களுக்கிடையிலான ரயில் சேவைகள் இன்று ஆரம்பம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மாவட்டங்களுக்கிடையிலான ரயில் சேவைகள் இன்று ஆரம்பம்!

மாவட்டங்களுக்கிடையிலான ரயில் சேவைகள் இன்று (18) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்று இரண்டாம் அலை ஏற்பட்டதன் காரணமாக அலுவலக ரயில் சேவைகள் தவிர்ந்த ஏனைய ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.

$ads={2}

எனினும், தற்போது நாட்டின்  இயல்பு நிலை ஓரளவு வழமைக்கு திரும்பியுள்ள நிலையில் இடைநிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவைகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இன்று முதல் பதுளை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கண்டி, மாத்தறை மற்றும் பெலியத்த ஆகிய வெளி மாவட்டங்களுக்கிடையிலான ரயில் சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

அத்துடன், குறித்த ரயில் சேவைகள் தவிர்ந்த ஏனைய ரயில் சேவைகள் அனைத்தும் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கொரோனா தொற்று அச்சநிலைமை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த  வெளிமாவட்ட ரயில் சேவைகள் இன்று  முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ் மாவட்ட பிரதான ரயில் நிலைய அதிபர் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.