கிண்ணியா பகுதியில் ஒன்பது மாத சிசு ஒன்றுக்கு கொரோனா தொற்று!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கிண்ணியா பகுதியில் ஒன்பது மாத சிசு ஒன்றுக்கு கொரோனா தொற்று!


கிண்ணியா- காக்காமுனை எனும் பகுதியில் 09 மாத சிசு உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிஞ்சாங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.


திருகோணமலை நீதிமன்றத்தில் கடமையாற்றி வரும் நபர் ஒருவரின் குடும்பத்தினருக்கு இன்று (28) பெறப்பட்ட அன்டிஜன் பரிசோதனை மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.


கிண்ணியா பிரதேசத்தில் தொடர்ச்சியாக மக்களை தெளிவூட்டி வருவதுடன் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடாத்தி வருவதாகவும் ஒவ்வொரு சங்கங்களின் ஊடாக தமது கிராமங்களை பாதுகாப்பது குறித்தும் அறிவுறுத்தல்களையும் அறிவூட்டல்களையும் வழங்கிவருவதாக குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர்  ஏ.எம். எம். அஜித் தெரிவித்தார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.