நாட்டில் மேலும் ஒரு பதிப்பான வைரஸ்; சுகாதார சேவைகள் வெளியிட்ட அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் மேலும் ஒரு பதிப்பான வைரஸ்; சுகாதார சேவைகள் வெளியிட்ட அறிவிப்பு!


புதிய வகை வைரஸ் தொற்றுப் பரவல் குறித்து இலங்கை உன்னிப்பாக அவதானித்து வருவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.


மேலும் பிற நாடுகளில் ஏற்பட்டுள்ள நிபா எனப்படும் புதிய வைரஸ் தொற்றுக் குறித்தும் சுகாதார அமைச்சு விசேட அவதானம் செலுத்தியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


$ads={2}


இருப்பினும், புதிய வைரஸ் தொற்றுப் பரவல் குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்க இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பிலிருந்து எந்த பரிந்துரையும் இதுவரை கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.


எனினும், ​​நிபா வைரஸ் உட்பட பிராந்தியத்தில் பரவும் பிற வைரஸ்களை சுகாதார அமைச்சு கண்காணித்து வருவதாகவும் ஹேமந்த ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், குறித்த நிபா வைரஸ் வௌவாலில் இருந்து பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதும், அதன் பாதிப்பு அதிகமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், நிபா வைரஸ் மனிதர்களிலும் பிற விலங்குகளிலும் தொற்று மூலம் பாதிப்புக்களை ஏற்படுத்துவதுடன், அதிக இறப்பு விகிதத்தையும் கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.