கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி IDH வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் தற்போது அவரது உடல் நலத்தில் எந்த குறைபாடும் இல்லை என்று சுகாதார அமைச்சின் ஊடக செயலாளர் விராஜ் அபேசிங்க தெரிவித்தார்.
கடந்த 23 ஆம் திகதி சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சிக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டது. PCR பரிசோதனைகளின் பின்னர் ஹிக்கடுவையிலுள்ள ஹோட்டலொன்றில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த அவர் தொற்றுறுதி செய்யப்பட்டதையடுத்து கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைகழக வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
எனினும், நேற்று அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சரின் நிலை குறித்து வினவிய போதே, அவரது உடல் நலம் தேறிவருவதாகவும் பாரிய பாதிப்புக்கள இல்லை என்றும் சுகாதார அமைச்சின் ஊடக செயலாளர் கூறினார்.