நாட்டில் வறுமை காரணமாகவே போதைபொருள் பாவனை அதிகரித்துள்ளதாகவும் அதனை கட்ப்படுத்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் யாழ் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளருமான அங்கஜன் இராமாநாதன் தெரிவித்துள்ளார்.
யாழ். பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அங்கஜன் இராமநாதன் தலைமையில் நடைபெற்றிருந்த நிலையில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.