பலூன்களுக்கு கொரொனா பரிசோதனை? இலங்கையில் சம்பவம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பலூன்களுக்கு கொரொனா பரிசோதனை? இலங்கையில் சம்பவம்!

திருகோணமலை - கண்டி வீதியில் அமைந்துள்ள ஆண்டாங்குள பிரதேசத்தில் இனந்தெரியாத நபர்களால் விட்டுச் செல்லப்பட்ட பலூன்களால் அப்பிரதேசத்தில் பதற்றநிலையொன்று ஏற்பட்டது.

கருப்பு நிற பலூன்கள் சில அப்பிரதேசத்தில் காணப்பட்டதை அடுத்து அவ்பலூன்களை குறித்த பிரதேச சிறுவர்கள் விளையாடிய நிலையில் பலூன்களுக்குள் கொரோனா வைரஸ் நிரப்பப்பட்டு ஆண்டாங்குள பிரதேசத்திற்கு கொண்டுவந்து போடப்பட்டதாக தகவல் பரவியதை அடுத்து குறித்த தகவல் அப்பிரதேச வாசிகளால் உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டது.

இதனை அடுத்து ஸ்தலத்திற்கு விஜயம் செய்த உப்புவெளி பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை அதிகாரிகள் இரண்டு பலூன்களை எடுத்து வந்து அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்டனர்.

இரண்டு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் இரண்டும் நெகட்டிவ் முடிவு வந்தது.

இதை அடுத்து கருத்து தெரிவித்த உப்புவெளி பொது சுகாதார வைத்திய அதிகாரி இது வதந்தி என்றும் வதந்திகளை பொதுமக்கள் நம்பவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.