தம்மிக பண்டார கொள்ளைச் செயலைச் செய்து ஒரு சண்டியராக செயற்படுகிறார்! -அரச பல் மருத்துவர்கள் சங்கம்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தம்மிக பண்டார கொள்ளைச் செயலைச் செய்து ஒரு சண்டியராக செயற்படுகிறார்! -அரச பல் மருத்துவர்கள் சங்கம்


கொரோனாவுக்கு மருந்து தான் தயாரித்ததாக கூறப்படும் கேகாலையை சேர்ந்த தம்மிக பண்டார ஒரு பல் மருத்துவர் மீது தாக்குதல் நடத்தியதை எதிர்த்து அரச பல் மருத்துவர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.


தம்மிக பண்டார உள்ளூர் சண்டியராக செயல்படுவதாக அரச பல் மருத்துவர்கள் சங்கம்  ஊடகவியலாளர் கூட்டத்தில் தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சங்கத்தின் வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க சுட்டிக்காட்டினார்.


மேலும் தம்மிக பண்டாரவின் கூற்றொன்றின் படி, குறித்த அவரது கொரோனாவுக்கு மருந்து ரூ. 4 மில்லியனுக்கு விநியோகிக்கப்பட்டிருந்தால், ரூ. 5 லட்சம் இலவசமாக விநியோகிக்கப்பட்டிருக்கும், ஆனால் மீதமுள்ள ரூ. 35 லட்சம் பெறுமதியான சாதனம் ரூ. 2,500 என வசூலித்திருந்தால், அவர் ஒரு பெரிய தொகையை சேகரித்திருப்பார் என்றும், அவர் ஒரு பெரிய கொள்ளைச் செயலைச் செய்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.