தேசிய சொத்துகளை பாதுகாக்க தாம் தொடர்ந்தும் போராடி வருகிறோம்! நாமல் ராஜபக்ஷ

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தேசிய சொத்துகளை பாதுகாக்க தாம் தொடர்ந்தும் போராடி வருகிறோம்! நாமல் ராஜபக்ஷ

தேசிய சொத்துக்களை பாதுகாக்க தாம் தொடர்ந்தும் போராடி வருவதாகவும், தேசிய சொத்துக்களை விற்பதற்கு எதிராக அன்றிருந்த அதே நிலைப்பாட்டிலேயே இன்றும் இருப்பதாக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் என்ற வகையில், அமைச்சரவையில் ஜனாதிபதி தீர்மானமொன்றை எடுக்க வேண்டும். அத்துடன், அனைத்து விடயங்களையும் ஆராய வேண்டும். இந்நாட்டு மக்களின் இதயத்துடிப்பை புரிந்துகொள்ள வேண்டும். ​தேசிய தேவைகளை புரிந்துகொள்ள வேண்டும். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்கும் போது, நாம் ஒன்றாக வௌியில் இறங்கி போராடினோம். 

அது மாத்திரமின்றி சிறைக்கும் சென்றோம். தேசிய சொத்துக்களை பாதுகாப்பதற்கு நாம் போராடியமையினால் அந்த நிலைமை ஏற்பட்டது. 

எனினும், அன்று துறைமுகத்தை முழுமையாக விற்கும் போது மௌனமாக இருந்தவர்கள், தற்போது முனையம் தொடர்பில் பேசுகின்றனர்.

ஹம்பாந்தோட்டை துறைமுகம் என்பது தேசிய சொத்தில்லையா என்று நாம் அவர்களிடம் கேட்கின்றோம் என நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.