இலங்கையின் பொறுப்பு கூறல் சார்ந்த பதில் அறிக்கை ஜெனிவா மனித உரிமை பேரவையில் இன்று (27) புதன்கிழமை தாக்கல் செய்யப்படவுள்ளது.
இலங்கையில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் உள்ள இலங்கை பிரதிநிதி ஊடாக இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு இவ்வாறு அறிக்கையாக தாக்கல் செய்யப்படவுள்ளது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.