வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க இன்று (27) முதல் மீண்டும் அமைச்சரின் இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
தேங்காய், கிதுல், பனை மற்றும் ரப்பர் சாகுபடி ஊக்குவிப்பு மற்றும் தொடர்புடைய தொழில்துறை தயாரிப்புகள் மற்றும் ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ கொரோனா தொற்றுக்கு இலக்கானதை தொடர்ந்து அமைச்சர் சி.பி.ரத்நாயக்க நெருங்கிய தொடர்புடன் இருந்தமையால், தனது வீட்டில் தன்னார்வமாக தனிமைப்படுத்தலுக்கு உள்ளானார்.