கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 05 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
விமான நிலையத்தில் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றும் 05 அதிகாரிகளுக்கே இவ்வாறு தொற்று உறுதியாகியிருக்கின்றது.
கடந்த 23ஆம் திகதி நடத்தப்பட்ட PCR பரிசோதனையின் முடிவு நேற்று வெளியாகியது. இதன்போதே ஐவருக்கு தொற்று இருப்பது இனங்காணப்பட்டதோடு, அவர்கள் பணியாற்றிய இடங்கள் தொற்று நீக்கலுக்கு உட்படுத்தப்படுகிறது.