கொரோனா வைரஸினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை கட்டாயமாக தகனம் செய்ய வேண்டும் என்ற இலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.
குறித்த செயற்பாடு நாட்டிலுள்ள முஸ்லிம் மற்றும் சிறுபான்மையினரின் நம்பிக்கைகளுக்கு முரணானது எனவும் அந்த சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில், கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட அல்லது தொற்று உறுதியானதாக சந்தேகிக்கப்படும் சடலங்களை கையாள்வதற்கான ஒரே வழியாக தகனம் செய்யப்படுவது மனித உரிமை மீறல் செயற்பாடுகளுக்கு சமமானதெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா பரவலைக் கட்டுபடுத்துவதற்கு பொதுவான சுகாதார நடைமுறைகளை கடுமையாக பின்பற்றுகின்ற போதிலும் கொரோனா காரணமாக மரணிப்பவர்களுக்கு கௌரவமளிக்க வேண்டும் எனவும் இலங்கையை அந்த சபை வலியுறுத்தியுள்ளது.
அதேவேளை, அவர்களின் மரபு, கலாசாரம் மற்றும் நம்பிக்கை என்பவற்றிற்கு மதிப்பளிக்க வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்குழு வலியுறுத்தியுள்ளது.
குறித்த செயற்பாடு நாட்டிலுள்ள முஸ்லிம் மற்றும் சிறுபான்மையினரின் நம்பிக்கைகளுக்கு முரணானது எனவும் அந்த சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில், கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட அல்லது தொற்று உறுதியானதாக சந்தேகிக்கப்படும் சடலங்களை கையாள்வதற்கான ஒரே வழியாக தகனம் செய்யப்படுவது மனித உரிமை மீறல் செயற்பாடுகளுக்கு சமமானதெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
$ads={2}
கொரோனா பரவலைக் கட்டுபடுத்துவதற்கு பொதுவான சுகாதார நடைமுறைகளை கடுமையாக பின்பற்றுகின்ற போதிலும் கொரோனா காரணமாக மரணிப்பவர்களுக்கு கௌரவமளிக்க வேண்டும் எனவும் இலங்கையை அந்த சபை வலியுறுத்தியுள்ளது.
அதேவேளை, அவர்களின் மரபு, கலாசாரம் மற்றும் நம்பிக்கை என்பவற்றிற்கு மதிப்பளிக்க வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்குழு வலியுறுத்தியுள்ளது.