இலங்கை துறைமுக அதிகார சபையின் அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்றிரவு வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரையின்பேரில், ஜனாதிபதி செயலாளரின் கையொப்பத்துடன் இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை விற்பனை செய்வதற்கு எதிர்ப்புகள் வலுத்துள்ளன. இந்நிலையில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தொழிற்சங்கங்கள் தயாராகிவருகின்றன. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே மேற்படி வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.