இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 313 ஆக உயர்ந்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றும் 08 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, மூன்றாவது தொடர்ச்சியான நாளாக இன்றும் இலங்கையில் கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை 800ஐ தாண்டியது.
இன்று மாத்திரம் 848 கொரோனா தொற்றாளிகள் கண்டறியப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.