கஜகஸ்தான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகள் வரவுள்ளதாக இலங்கையின் ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
கஜகஸ்தானில் இருந்து அடுத்த மாத முற்பகுதியில் சுற்றுலாப்பயணிகள் வரவுள்ளனர். அத்துடன் ரஷ்யாவில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வரவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் இலங்கைக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் மத்தியில் மேற்கொள்ளப்படும் PCR பரிசோதனைகள் தொடர்பில் இலங்கையின் அதிகாரிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வீரதுங்க கோரியுள்ளார்.
தற்போது மேற்கொள்ளப்படும் 4 PCR பரிசோதனைகளை தாம் எதிர்ப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.