பாடசாலையில் மயங்கி விழுந்த மாணவர்; பரிசோதனையில் தொற்று உறுதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாடசாலையில் மயங்கி விழுந்த மாணவர்; பரிசோதனையில் தொற்று உறுதி!


ஹட்டன் பகுதியில் பாடசாலை ஒன்றில் கற்கும் 14 வயது மாணவர் ஒருவர் பாடசாலை நேரத்தில் மயக்கமுற்றதால் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.


வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் சோதனையில் கொரோனா தொற்றிருப்பது உறுதியானது.


இதேவேளை வகுப்பிலுள்ள 37 மாணவர்கள் மற்றும் 14 ஆசிரியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பாடசாலை வளாகம் கிருமித் தொற்று நீக்கம் செய்யப்பட்டதாகவும் அப்பகுதிக்குப் பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.


மேலும் குறித்த மாணவரின் தாயாருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் சோதனையிலும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.



-சி.எல்.சிசில்
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.