தரம் ஆறுக்கு மாணவர்கள் இணைத்துக் கொள்ளும் நடவடிக்கை தொடர்பான அறிவித்தல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தரம் ஆறுக்கு மாணவர்கள் இணைத்துக் கொள்ளும் நடவடிக்கை தொடர்பான அறிவித்தல்!


தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கையில் மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை என்று கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.


உரிய பாடசாலைகளுக்கு இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை.


பாடசாலை வகுப்பறையின் அளவையோ, மாணவர்களின் எண்ணிக்கையையோ குறைப்பதற்கான எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை. பிள்ளைகளுக்கு அநீதி ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாது என்றும் அமைச்சின் செயலாளர் வலியுறுத்தினார்.


தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் ஆகக்கூடுதலான புள்ளிகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தன. ஆனால், பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடைமுறையில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.


இது தொடர்பான மேலதிக விபரங்களை கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பார்வையிட முடியும். மேன்முறையீடுகளை சமர்ப்பிப்பதற்கு அடுத்த மாதம் 15 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.