பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஹல்ட் ஸ்ரொப் உச்ச நீதிமன்ற வளாகம் அருகே நீதியமைச்சின் புதிய கட்டிடத்துக்கான கட்டுமானப் பணிகள் இன்று (25) ஆரம்பமாகின.
16,500 மில்லியன் ரூபா இக்கட்டுமானத்துக்கென ஒதுக்கப்பட்டுள்ளது. ஆறு ஏக்கர் பரப்பளவில் அமையப் பெறவுள்ள இந்தக் கட்டிடத்துக்கான கட்டுமானப் பணிகளை எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் நீதித்துறை அமைச்சர் அலி சப்ரி, சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.