ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன்படி நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹேஷா வித்தானே, சமிந்த விஜேசிறி ஆகியோரே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பா.உ வசந்த யாப்பா பண்டாரவுக்கு கொரோனா தொற்று இன்று (25) உறுதி செய்யப்பட்டுள்ளது. இவருடன் நெருக்கமாக இருந்த காரணத்தினால் மேற்படி இரு உறுப்பினர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படவுள்ளது.