இரு பிரபல புகையிரத சேவைகள் இன்று முதல் மீள் ஆரம்பம்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இரு பிரபல புகையிரத சேவைகள் இன்று முதல் மீள் ஆரம்பம்!!


கொரோனா பரவல் காரணமாக கடந்த 03 மாதங்களுக்கும் மேலாக இடைநிறுத்தப்பட்டிருந்த உடரட்ட மெனிக்கே மற்றும் தெனுவர மெனிக்கே ஆகிய புகையிரத சேவைகள் இன்று (25) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண புகையிரத அத்தியட்சகர் ஆனந்த கருணாரத்ன தெரிவித்தார்.


அதில் அவர் மேலும் தெரிவிக்கையில், 


பொடி மெனிக்கே கடந்த வாரம் முதல் இயங்கி வருகின்றது. புகையிரதங்கள் சுகாதார வழிகாட்டுதல்களின்படி இயக்கப்படுகின்றன. கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்குச் செல்லும் உடரட்ட மெனிக்கே மற்றும் தெனுவர மெனிக்கே ஆகிய புகையிரதங்கள் ஹட்டன் ரயில் நிலையத்துக்கு வந்த போது கொரோனா விதிமுறைகளுக்கு அமைய அதிகளவான பயணிகள் அங்கு கூடியிருந்ததாகவும் அவர் கூறினார்.


இதேவேளை கொழும்பு கோட்டையிலிருந்து நானு ஓயா வரை ‘செங்கடகல மெனிக்கே’ எனும் பெயரில் புதிய புகையிரதம் ஒன்று நாளாந்த சேவையில் ஈடுபடவுள்ளது. இது நண்பகல் 12.40க்கு கொழும்பிலிருந்து புறப்பட்டு இரவு 8.20 மணிக்கு ஹட்டனை வந்தடையவுள்ளது.


மேலும் கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்குச் செல்லும் இரவு தபால் ரயிலும் இன்று முதல் சேவையை ஆரம்பிப்பதாக மத்திய மாகாண புகையிரத அத்தியட்சகர் கூறினார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.