இந்திய தடுப்பூசி விவகாரம்; துறைமுகத்தை பெற்றுக் கொள்ளும் நோக்கில் வழங்கியிருந்தால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது! -பிமல் ரத்நாயக்க

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இந்திய தடுப்பூசி விவகாரம்; துறைமுகத்தை பெற்றுக் கொள்ளும் நோக்கில் வழங்கியிருந்தால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது! -பிமல் ரத்நாயக்க


இந்தியா இலங்கைக்கு தடுப்பூசி வழங்கியமையானது உள்நோக்கமாக இருந்தால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.


வவுனியாவில் இன்று (30) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.


அங்கு மேலும் தெரிவிக்கையில்,


இந்தியாவினால் இலங்கைக்கு தடுப்பூசி வழங்கியதானது எந்தவித பிரதி உபகாரம் இல்லாமலோ அல்லது எந்தவித உள்நோக்கமின்றி வழங்கியிருந்தால் அதனை நாங்கள் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறோம்.


ஆனால் இலங்கை துறைமுகத்தை பெற்றுக் கொள்வதற்காகத் தான் இந்த தடுப்பூசியை வழங்கியிருந்தால் அதனை நாங்கள் சாதகமாக ஏற்றுக்கொள்ள முடியாது.


அவ்வாறு இருந்தால் இச்செயற்பாட்டை நாங்கள் ஒரு உள்நோக்கம் கொண்டதாகவே நாங்கள் பார்க்கிறோம்.இவ்வாறான செயற்பாடுகளை இந்தியா மேற்கொள்ள கூடாது.


இதேவேளை, இச்செயற்பாட்டிற்கு இலங்கை அரசாங்கமும் உடந்தையாக போக கூடாது. 


இலங்கையில் எந்த பகுதியாக இருந்தாலும் சரி குறிப்பாக ஹம்பாந்தோட்டையை சீனாவிற்கு வழங்கியமை, அதேபோன்று கொழும்பு துறைமுகத்தை வழங்குவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே நாங்கள் பார்க்கின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.