பாடசாலை சென்ற மாணவரொருவருக்கு கொரோனா - நெருங்கிய தொடர்பில் இருந்த பலர் தனிமைபடுத்தலில்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாடசாலை சென்ற மாணவரொருவருக்கு கொரோனா - நெருங்கிய தொடர்பில் இருந்த பலர் தனிமைபடுத்தலில்!

ஹட்டன் பகுதியில் உள்ள பாடசாலை மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதும், குறித்த மாணவருடன் தொடர்பில் இருந்த 53 மாணவர்கள் மற்றும் ஆசிரியர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட குறித்த மாணவர், இம்மாதம் மாதம் 7, 8 திகதிகளில் பாடசாலை சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதை ஹட்டன் டிக்கோயா நகர சபையின் பொது சுகாதார ஆய்வாளர் ஆர்.ஆர்.எஸ் மெதவெல உறுதிப்படுத்தினார்.


$ads={2}

மாணவரின் தந்தையும் கொரோனா தொற்றுக்கு இலக்காகி இருந்துள்ளார். மேலும் அவர் கொழும்பில் பணி புரிந்தும் வருகின்றார். 

அவரது குடும்ப உறுப்பினர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், நடத்தப்பட்ட பி.சி.ஆர் சோதனையின்படி, மாணவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.