இலஞ்ச ஊழல்; கண்டி மாநகர சபை உறுப்பினர்கள் இருவர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலஞ்ச ஊழல்; கண்டி மாநகர சபை உறுப்பினர்கள் இருவர் கைது!


கண்டி மாநகர சபை உறுப்பினர்கள் இருவர் 150,000 ரூபாவை இலஞ்சமாகப்பெற முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். 


இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று (05) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவு பணிப்பாளர் பெண் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பத்மினி வீரசூரிய தெரிவித்தார்.


$ads={2}


கண்டி - கட்டுகஸ்தோட்டை பாலத்துக்கு அருகாமையில் டிஜிட்டல் பதாகை ஒன்றை நிறுவுவதற்காக கண்டி மாநகர சபையினால் முதற்கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


இந்த நடவடிக்கையை துரிதமாக முன்னெடுக்கும் பொருட்டு மாநகர சபை உறுப்பினர்கள் குறித்த திட்டத்தை முன்னெடுப்பவரிடம் இலஞ்சம் கோரியுள்ளனர். இது தொடர்பில் குறித்த நபர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடளித்துள்ளார். இதனையடுத்தே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


-எம்.எப்.எம்.பஸீர்


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.