மத்திய கிழக்கில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு 5 லட்சம் கொடுப்பனவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மத்திய கிழக்கில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு 5 லட்சம் கொடுப்பனவு!


மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா காரணமாக 89 இலங்கையர்கள் இதுவரை மரணித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இன்று (05) தெரிவித்துள்ளது.


இறந்தவர்களின் உடல்களை இலங்கைக்கு கொண்டுவருவது நடைமுறையிலுள்ள தொற்று நோய் காரணமாக சாத்தியமில்லை என்பதால் அவை அங்கேயே புதைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்தார்.


$ads={2}


இறந்தவர்கள் குறித்த அறிக்கைகள் கிடைத்ததும் அவர்களது குடும்பங்களுக்கு இழப்பீடாக 40 ஆயிரம் ரூபா ஆரம்பத் தொகையாக வழங்கப்படும் என்றும் மேலதிக கொடுப்பனவாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் சட்டபூர்வமாக பதிவு செய்யப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு 5 லட்சம் ரூபா வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


தற்போது வரை கிட்டத்தட்ட 40 ஆயிரம் தொழிலாளர்கள் வெளிநாடுகளிலிருந்து திருப்பி அழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து  வந்தவர்கள் என்றும் மங்கள ரந்தெனிய தெரிவித்தார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.