மாவனெல்லையில் புத்தர் சிலையை சேதமாக்கிய நபர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மாவனெல்லையில் புத்தர் சிலையை சேதமாக்கிய நபர் கைது!


மாவனெல்லை ஹிங்குல பிரதேசத்தில் கடந்த 28 ஆம் திகதி இரவு புத்த சிலை ஒன்றுக்கு சேதம் ஏற்படுத்திய சந்தேக நபர் மாவனெல்லை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.


கேகாலை சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகரின் அறுவுறுத்தலின் பேரில் மாவனெல்லை பொலிஸார் மற்றும் குற்றவியல் துப்பறியும் பணியகம் ஆகியன விசாரணைகளை மேற்கொண்டன.


$ads={2}


கேகாலை ஹெட்டிமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயது சந்தேக நபர் இதன்போது அடையாளம் காணப்பட்டார். இன்று மாவனெல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குறித்த நபர் மாவனெல்லை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்தார்.


இச்சம்பவம் பயங்கரவாதச் செயலின் ஒரு பகுதி எனக் கூறப்பட்டபோதிலும் பயங்கரவாதத்துடன் எந்தத் தொடர்பும் இல்லை என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.