புலம்பெயர்ந்த இலங்கையர்கள் நாடு திரும்பியதும் ஹோட்டல்களில் இலவசமாகவே தனிமைப்படுத்தப்பட்ட வேண்டும்! -நாமல் ராஜபக்ஷ

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புலம்பெயர்ந்த இலங்கையர்கள் நாடு திரும்பியதும் ஹோட்டல்களில் இலவசமாகவே தனிமைப்படுத்தப்பட்ட வேண்டும்! -நாமல் ராஜபக்ஷ


வெளிநாடுகளின் இருந்து தற்போது நாட்டுக்கு திருப்பி அழைத்துவரப்படும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அரசாங்கத்தால் இலவசமாக ஹோட்டல்களில் தனிமைப்படுத்த அனுமதிக்க வேண்டும், அல்லது அவர்களின் சொந்த வீடுகளில் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அரசுக்கு பரிந்துரை விடுத்துள்ளார்.


இலங்கை புலம்பெயர்ந்த தொழிளார்கள் அங்கு வேலை இழந்து, மீதமுள்ள சேமிப்புகளுடன் நாட்டிற்கு திரும்பும் நிலையில் அவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.


$ads={2}


நேற்று (05) நடைபெற்ற ஆளும் கட்சியின் கூட்டத்தின் போது அமைச்சர் இந்த முன்மொழிவை முன்வைத்தார்.


அதைத் தொடர்ந்து அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்பட்ட ஹோட்டல்களில் ஏன் இதுவரை புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தனிமைப்படுத்தலுக்கு பயன்படுத்தப்படவில்லை என்பது குறித்து தீவிர விவாதம் ஒன்றும் இடம்பெற்றது.


இந்நிலையில், புலம் பெயர்ந்த இலங்கை தொழிலாளர்கள் நாடு திரும்புவதற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சலுகை விகிதத்தில் விமான டிக்கெட்டுக்களை வழங்க வேண்டும் என்று அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.


இதற்கிடையில், இராஜாங்க அமைச்சர் அருண்திக பெர்னாண்டோ, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் திருப்பி நாட்டுக்குள் அழைத்துவரப்படும் செலவுகளை ஏற்கனவே செய்துள்ளதால், அவர்களின் வீடுகளில் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும் செயல்முறைக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று முன்மொழிந்தார்.


-எம்.எம் அஹ்மத்


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.