பௌத்த துறவியை கடத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் உட்பட நால்வர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பௌத்த துறவியை கடத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் உட்பட நால்வர் கைது!


அவிசாவளை - ஹன்வெல்லவின் தும்மோதர என்ற இடத்தில் 65 வயது பௌத்த துறவி ஒருவரை கடத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட நான்கு பேர் சந்தேககத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


2021 ஜனவரி 03ஆம் திகதி அன்று, ஹன்வெல பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின்படி ஜனவரி 02ஆம் திகதியன்று உடுவில தர்மசிறி தேரர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.


$ads={2}


இந்நிலையில், குறித்த பௌத்த துறவியின் எரிந்த உடல் கொடதெனியாவ பகுதியில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது.


இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது சந்தேககத்தின் பேரில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அத்துடன் இந்தக் குற்றத்துக்காக பயன்படுத்தப்பட்ட ஒரு வாகனம் பொலிஸாரால்  மீட்கப்பட்டது.


விசாரணையின் போது கொல்லப்பட்ட துறவிக்கும் கைது செய்யப்பட்டவர்களில் இருவருக்கும் இடையே சண்டை நிகழ்ந்தமை தெரியவந்துள்ளது.


அத்துடன் அவர்கள் குறித்த பௌத்த துறவியுடன் தங்கியிருந்த இளம் துறவி ஒருவரின் பெற்றோர் என்பது தெரியவந்துள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.