கள்ளக்காதலியின் வீடு வரை பாதாளம் தோண்டிய நபருக்கு நேர்ந்த விடயம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கள்ளக்காதலியின் வீடு வரை பாதாளம் தோண்டிய நபருக்கு நேர்ந்த விடயம்!

காதலி வீடு வரை பாதாளம் தோண்டிய வாலிபர், காதலியின் கணவரிடம் கையும் களவுமாக சிக்கினார்.

தனது காதலியை சந்திப்பதற்காக பாதாளத்தை தோண்டி காதலி வீடு வரை சென்ற வாலிபர், காதலியின் கணவனிடன் கையும் களவுமாக சிக்கியுள்ளார்.

மெக்சிகோ நாட்டை சேர்ந்தவர் ஆல்பர்டோ. வில்லாஸ் டெல் பிராடோ என்ற இடத்தில் உள்ள திஜுவானா என்ற பகுதியில் இவர் வசித்து வருகிறார். இதே பகுதியில் அவரது காதலியும் வசித்து வருகிறார்.


$ads={2}



ஆல்பர்டோ தனது காதலியை சந்திப்பதற்காக தனது வீட்டில் இருந்து காதலி வீடு வரை பாதாளத்தில் பாதை தோண்டி சென்றுள்ளார்.

காதலியின் கணவரான ஜார்ஜ் வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியே சென்ற நேரத்தில் இவர் பாதாள வழி தோண்டியுள்ளார்.

எனினும், ஜார்ஜ் வழக்கத்தை விட சீக்கிரமாக வீடு திரும்பிய நிலையில் இருவரும் கையும், களவுமாக சிக்கிக்கொண்டனர். வீட்டில் இருக்கும் சோபாவுக்கு பின் ஆல்பர்டோ மறைந்திருந்துள்ளார். அப்போது அவரை ஜார்ஜ் பிடித்துவிட்டார்.

இதைத்தொடர்ந்து, வீடு வரை தோண்டப்பட்ட பாதாள பாதையும் கண்டுபிடிக்கப்பட்டது. ஜார்ஜ் வீட்டில் இருந்து ஆல்பர்டோ வீடு வரை பாதாள பாதை தோண்டப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார் ஜார்ஜ்.

ஆல்பர்டோவுக்கு ஏற்கெனவே திருமணமாகி இருந்ததால் அவரும் மனைவியிடம் சிக்கிக்கொண்டார். இதைத்தொடர்ந்து ஆல்பர்டோவுக்கும், ஜார்ஜுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இப்பிரச்சினையில் போலீஸார் குறுக்கிட்டி சமாதானம் செய்தனர்.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.