இந்திய அரசு நன்கொடையாக 500,000 ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளுடன் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் AI-281 இன்று (28) முற்பகல் 11.35 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தது.
42 பெட்டிகளில் தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டன, அவற்றைப் பெற்றுக் கொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபத ராஜபக்ஷ விமான நிலையத்திற்கு வந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.