இலங்கையின் தற்போதைய மனித உரிமை நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது - மனித உரிமை கண்காணிப்பகம்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையின் தற்போதைய மனித உரிமை நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது - மனித உரிமை கண்காணிப்பகம்

இலங்கையின் தற்போதைய மனித உரிமை நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

நாட்டின் சிறுபான்மை சமூகத்தினர் பாகுபாட்டையும் அச்சுறுத்தல்களையும் எதிர்நோக்குவதாக மனித உரிமை கண்காணிப்பகம் நேற்று (13) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


$ads={2}

சிறுபான்மை சமூகத்தினரே கொரோனாவை திட்டமிட்டு பரப்பி வருவதாக சுமத்தப்படும் பொய்யான குற்றச்சாட்டுகள் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையெனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கங்கள் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்பதுடன், பொறுப்புக்கூறல், சாட்சிகளை பாதுகாத்தல் தொடர்பில் பிரேரணையொன்றை கொண்டு வருமாறு ஐக்கிய நாடுகள் சபைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி வலியுறுத்தியுள்ளார்.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.