இன்று அதிகாலை முதல் விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள் தொடர்பான முழு விபரம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்று அதிகாலை முதல் விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள் தொடர்பான முழு விபரம்!

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட சில பகுதிகளின் தனிமைப்படுத்தல் இன்று முதல் தளர்த்தப்பட்டுள்ளதாக கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.

இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் இதுவரை காலம் தனிமைப்படுத்தப்பட்டிருந்த முகத்துவாரம் பொலிஸ் பிரிவின் தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.


$ads={2}

இன்று (04) அதிகாலை 5 மணியுடன் முகத்துவாரம் பொலிஸ் பிரிவின் தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்த்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவின் புதுக்கடை மேற்கு மற்றும் புதுக்கடை கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கான தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்டுள்ளது.

பொரள்ளை பொலிஸ் பிரிவின் வனாத்தமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் மிரிஹான பொலிஸ் பிரிவின் தெமலவத்த பகுதியின் தனிமைப்படுத்தலும் தளர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்டத்தின் பேலியகொடவத்தை, மீகஹவத்தை ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் தனிமைப்படுத்தல் இன்று (04) முதல் தளர்த்தப்பட்டுள்ளன.

மேலும், பட்டிய வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவின் ரோஹண விஹார மாவத்தை, பேலியகொட கங்கபட கிராம உத்தியோகத்தர் பிரிவின் நெல்லிகஹவத்தை மற்றும் புரண கொட்டுவத்த ஆகிய பகுதிகளின் தனிமைப்படுத்தலும் தளர்த்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவிக்கின்றார்.

கிரிபத்கொட பொலிஸ் பிரிவின் விலேகொட கிராம உத்தியோகத்தர் பிரிவின் ஸ்ரீ ஜயந்தி மாவத்தை பகுதியின் தனிமைப்படுத்தல் இன்று முதல் தளர்த்தப்பட்டுள்ளது.

இவை தவிர்ந்த ஏனைய பகுதிகளுக்கான தனிமைப்படுத்தல் மறுஅறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.