உக்ரேனிய சுற்றுலா பயணிகளின் விஜயம் காரணமாக உள்நாட்டு பயணிகளுக்கு சுற்றுலா செல்ல தடை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உக்ரேனிய சுற்றுலா பயணிகளின் விஜயம் காரணமாக உள்நாட்டு பயணிகளுக்கு சுற்றுலா செல்ல தடை!

பொலன்னறுவை மற்றும் சிகிரியா ஆகிய சுற்றுலா தளங்களுக்கு இன்றைய தினம் (04) உள்நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய கலாசார நிதியம் தெரிவிக்கின்றது.

இன்று (04) மற்றும் நாளை (05) ஆகிய இரு தினங்களில் உள்நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


$ads={2}

நாட்டிற்கு வருகைத் தந்துள்ள யுக்ரேன் நாட்டு சுற்றுலாப் பயணிகள் குறித்த இரண்டு பகுதிகளுக்கும் செல்லவுள்ள நிலையிலேயே, உள்நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பொலன்னறுவையிலுள்ள 4 சுற்றுலா தளங்களுக்க இன்று பிற்பகல் ஒரு மணி முதல் உள்நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு செல்லமுடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, சிகிரியா சுற்றுலா வலயத்திற்கு நாளை மறுதினம் நண்பகல் 12 மணி முதல் உள்நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக மத்திய கலாசார நிதியம் தெரிவிக்கின்றது. 


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.