தெற்காசியாவில் மிகப்பெரிய போதைப்பொருள் மாத்திரைகள் இலங்கையில் பறிமுதல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தெற்காசியாவில் மிகப்பெரிய போதைப்பொருள் மாத்திரைகள் இலங்கையில் பறிமுதல்!


இலங்கை சுங்கத் திணைக்களத்தின் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தெற்காசியாவிலேயே மிகப்பெரும் சட்டவிரோத போதை மாத்திரைகளை பறிமுதல் செய்துள்ளதாக  சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


135 மில்லியன் ரூபா பெறுமதியான 9 கிலோ நிறை கொண்ட 18,000 மாத்திரைகள் மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்தில் வைத்து பறிமுதல் செய்யப்பட்டன.


$ads={2}


இந்த மாத்திரைப் பொதிகள் கொழும்பு 5 இல் உள்ள முகவரிக்கு பெல்ஜியம் நாட்டிலிருந்து அனுப்பப்பட்டுள்ளன.


மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்தால் பெறப்பட்ட பல பொதிகள் குறித்து இலங்கைச் சுங்கத்திணைக்களம் நடத்திய விசாரணையில் இந்தப் போதை மாத்திரைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.


மேலதிக விசாரணையில் 8 புகையிலைப் பொதிகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.