14 வயது சிறுமி துஷ்பிரயோகம்! மூதூரில் சம்பவம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

14 வயது சிறுமி துஷ்பிரயோகம்! மூதூரில் சம்பவம்!


திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 14 வயதான சிறுமியை  துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சந்தேக நபர் ஒருவரை இம்மாதம் 19 ஆம் திகதி  வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம். சம்சுதீன் உத்தரவிட்டார்.


தோப்பூர் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


$ads={2}


சந்தேக நபர் பெற்றோர்களுக்கு தெரியாமல் அவர்களது 14 வயதுடைய சிறுமியை அழைத்துச் சென்று  துஷ்பிரயோகத்துக்கு உட்படுதியதாக தெரிவித்து சிறுமியின் பெற்றோரால் மூதூர் பொலிஸில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய கைது செய்யப்பட்டு பொலிஸார் மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.


சந்தேக நபருக்கு பிணையாளரை மிரட்டியமை, வீட்டை உடைத்து திருடியமை மற்றும் திருட்டுப் பொருட்களை வைத்திருந்தமை போன்ற வழக்குகள் மூதூர் நீதிமன்றில் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.