நாட்டில் கொரோனா கொத்தணிகளே காணப்படுகின்றன - கொரோனா சமூகப்பரவல் அடையவில்லை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் கொரோனா கொத்தணிகளே காணப்படுகின்றன - கொரோனா சமூகப்பரவல் அடையவில்லை!

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் இன்னும் கொத்தணிகளாகவே உள்ளது, ஆகவே வைரஸ் இன்னும் சமூகமயமாக்கப்படவில்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.


“இலங்கை தற்போது ஒரு கொத்தணி சூழ்நிலையில் உள்ளது. பிராண்டிக்ஸில் தொடங்கி பேலியகொடை மீன் சந்தைக்கு வந்தது, பின்னர் கொழும்பில் பரவியது அனைவருக்கும் தெரியும். நாட்டில் எந்தவொரு பிரதேசத்திலாவது தொற்றாளர் ஒருவர் இனங்காணப்படுமிடத்து கொத்தணி உருவாகின்றது. இவ்வாறான கொத்தணிகளையே நாங்கள் உடனடியாக இனங்காண்கின்றோம், அப்பகுதிகளுக்குச் சென்று பரிசோதனைகால் செய்கிறோம். இவைகள் கைவிடப்பட்டால் மாத்திரமே கொரோனா சமூகமயமாக்கப்படும்” என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.


$ads={2}

மேலும், கொரோனா வைரசுக்கு எதிராக பயன்படுத்த மிகவும் பயனுள்ள மற்றும் பாதுகாப்பான தடுப்பூசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

இது தொடர்பாக தற்போது இந்தியா மற்றும் சீனாவுடன் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

"நாங்கள் பாதுகாப்பான தடுப்பூசி கொண்டு வருவோம் என்று நம்புகிறோம். எந்த தடுப்பூசி வரும் என்பதுதான் நாம் இன்னும் சொல்ல முடியாது. மற்ற அனைத்தும் தயாராகி வருகின்றன. ”
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.