கொழும்பு துறைமுகம்; இந்திய நிறுவனம் பொறுபெடுத்தால் போராட்டங்கள் மேற்கொள்ளப்படும்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொழும்பு துறைமுகம்; இந்திய நிறுவனம் பொறுபெடுத்தால் போராட்டங்கள் மேற்கொள்ளப்படும்!

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு பகுதியை இந்திய நிறுவனம் பொறுப்பெடுத்தால் அதற்கெதிராக போராட்டங்கள் மேற்கொள்ளப்படும் என பெங்கமுவெ நாலக்க தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


நல்லாட்சியில் அறிவிக்கப்பட்டதற்கமைவாக இந்திய அதானி நிறுவனத்திடம் குறித்த பகுதி ஒப்படைக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், நல்லாட்சி அரசு முழுமையாக வழங்க இருந்தாகவும் தமது அரசு 49 வீத பங்குகளையே வழங்குவதாகவும் அரசு அண்மையில் விளக்கமளித்திருந்தது.


$ads={2}

எனினும், கடந்த அரசும் அதே நிபந்தனையிலேயே இந்திய நிறுவனத்திடம் ஒப்படைக்கவிருந்தமைக்கான ஆவணங்களை எதிர்க்கட்சியினர் வெளியிட்டிருந்தனர். முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீரவும் இதை முன்மொழிந்துள்ள நிலையில் பௌத்த துறவிகள் எதிர்ப்பு வெளியிட ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.