தற்கொலைதாரியின் தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்கள் விடுதலை; எதிரான ஆதாரங்கள் சாதகமாக்கப்பட்டுள்ளது! -காதினல் மல்கம் ரஞ்சித்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தற்கொலைதாரியின் தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்கள் விடுதலை; எதிரான ஆதாரங்கள் சாதகமாக்கப்பட்டுள்ளது! -காதினல் மல்கம் ரஞ்சித்

சினமென் கிராண்ட் ஹோட்டலில் தற்கொலை குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட நபரின் தொழிற்சாலையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறித்து காதினல் மல்கம் ரஞ்சித் கரிசனை வெளியிட்டுள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவை பேராயர் இல்லத்திற்கு அழைத்து, காதினல் மல்கம் ரஞ்சித் தனது கவலையை வெளியிட்டுள்ளார் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த தொழிலாளர்கள் விடுதலை செய்யப்பட்டதன் பின்னால் உள்ள காரணங்கள் குறித்து, கேள்வி எழுப்பியுள்ள மல்கம் ரஞ்சித் அவர்கள், என்ன அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள் என்பத குறித்து கவலை வெளியிட்டுளளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று 21 மாதங்களாகின்ற போதிலும், இந்த தாக்குதலுடன் தொடர்புபட்ட சந்தேக நபர் எவரும் உரிய முறையில் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பின்னணியில் தற்கொலை குண்டுதாரியின் தொழிற்சாலையில் பணிபுரிந்த தொழிலாளர்கள், விடுதலை செய்யப்பட்டுள்ளமை கவலை அளித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணைகளின்போது இவர்களிற்கு எதிரான ஆதாரங்கள் அவர்களிற்கு சாதகமான விதத்தில் பயன்படுத்தப்பட்டமை குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.