முடிந்தால் அநுர குமாரவை சிறையில் அடைத்துக்காட்டுங்கள்! அரசாங்கத்துக்கு சவால்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முடிந்தால் அநுர குமாரவை சிறையில் அடைத்துக்காட்டுங்கள்! அரசாங்கத்துக்கு சவால்!

அநுர குமார திஸாநாயக்கவை ஒரு ஊழல்வாதியென முடிந்தால் நிரூபித்துக் காட்டுமாறு ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க அரசாங்கத்திற்கு சவால் விடுத்துள்ளார்.

தலவாக்கலை நகரில் நேற்று (22) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவித்ததாவது,

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டிருந்த ஊழில் ஒழிப்பு ஆணைக்குழு ஊடாக அநுர குமார திஸாநாயக்கவும் தவறு செய்துள்ளதாக ஒரு கதையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

ஜனாதிபதியால் நியமிக்கப்படும் குழுக்களால் தண்டனை வழங்க முடியாது. நீதிமன்றத்தால் தான் தண்டனை வழங்க முடியும் என்பதை தெரிவிக்க விரும்புகிறோம்.

மக்களுக்கு நாம் ஒன்றை தெளிவாக தெரிவிக்க விருப்புகிறோம். நாம் எப்போதும் பேய்களுக்கு பயப்படுவதில்லை. ஆகவே, நாம் அரசாங்கத்திற்கு பயமில்லை.

அநுர குமார திருடர்களுக்கு பயமென்றால் அவர்களை திருடர்களென கூறமாட்டார்.

ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் பலர் ஊழல் - மோசடிகளில் ஈடுபட்டனர் என்பதற்கான அனைத்து ஆதாரங்களையும் அறிந்துதான் தகவல்களை வெளியிட்டுள்ளோம்.

ஊழல் எதிர்ப்பு குழுக்கள் என ஊழல்வாதிகளே குழுக்களை அமைத்துக்கொண்டு அரசுக்கு எதிரான கருத்துகளை ஒடுக்குகின்றனர்.

அவ்வாறான ஊழல் குழுக்களின் மூலம் தான் பிள்ளையானை விடுதலைச் செய்துள்ளனர்.

அந்த குழுக்கள் ஊடாக தான் சிபாரிசுகள் வருகின்றன. பல்வேறு ஊழல் - மோசடிகள் மற்றும் குற்றச்செயல்களின் ஈடுபட்டவர்கள் விடுதலைச் செய்யப்படுகின்றனர்.

ஆகவே, நீதிமன்றம் நீதியானதா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

நீதிமன்ற நடவடிக்கைகளை எதிர்கொள்ள நாம் தயார். அதேபோன்று நாடாளுமன்றத்திலும் அதற்கும் வெளியிலும் என அனைத்து இடங்களிலும் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள தயாராகவே இருக்கின்றோம்.

முடிந்தால் நீதிமன்றில் குற்றவாளியாக்கி அநுர குமாரவை சிறையில் அடைத்துக்காட்டுங்கள் என்றார்.

மூலம் - ஐ.பி.சி

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.