தமிழ் - நேற்றைய தினம் பதிவான கொரோனா தொற்றாளர்களின் பிரதேசங்கள் தொடர்பான முழுத் தகவல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தமிழ் - நேற்றைய தினம் பதிவான கொரோனா தொற்றாளர்களின் பிரதேசங்கள் தொடர்பான முழுத் தகவல்!

இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 843 பேரில் 480 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

நாரஹேன்பிட்டிய, கல்கிஸ்ஸை மற்றும் வெல்லம்பிட்டிய ஆகிய பகுதிகளில் தலா 29 பேர் என்ற அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வௌ்ளவத்தை பகுதியில் 22 பேர், கருவாதோட்டம் மற்றும் கோதொட்டுவ ஆகிய பகுதிகளில் தலா 21 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்தில் 86 பேர், களுத்துறை மாவட்டத்தில் 72 பேர்,காலி மாவட்டத்தில் 40 பேர் , கண்டி மாவட்டத்தில் 35 பேர் மற்றும் மாத்தறை மாவட்டத்தில் 17 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப் பட்டுள்ளனர் .


$ads={2}

அம்பாறை மாவட்டத்தில் 16 பேர் , புத்தளம் மாவட்டத்தில் 14 பேர், திருகோணமலை மாவட்டத்தில் 13 பேர் , இரத்தினபுரி மாவட்டத்தில் 12 பேர், பதுளை மாவட்டத்தில் 09 பேர், பொலன்னறுவை மாவட்டத்தில் 08 பேர் , வவுனியா மாவட்டத்தில் 06 பேர், கேகாலை மாவட்டத்தில் 06 பேர், மாத்தளை மாவட்டத்தில் 05 பேர், மொனராகலை மாவட்டத்தில் 04 பேர் மற்றும் குருணாகல் மாவட்டத்தில் 04 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர் .

நுவரெலியா , அம்பாந்தோட்டை, அனுராதபுர , மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங் களில் தலா 02 பேர் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் என்ற அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் வெளிநாட்டிலிருந்து வருகை தந்த இருவர் அடங்கலாக நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக காணப்பட்டுள்ளனர் என கொவிட்-19 தடுப்பிற் கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.