பாராளுமன்ற வளாகத்தில் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன மற்றும் 15 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு புதன்கிழமை (13) பி.சி. ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
எவரும் கொரோனா தொற்றுக்கு இலக்காகவில்லை என பரிசோதனை முடிவுகளில் இருந்து தெரிய வந்துள்ளன
மேலும் பாராளுமன்ற ஊழியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உட்பட 448 நபர்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டன. அவர்களுக்கான பரிசோதனை முடிவுகள் இன்று (15) வரவுள்ளன.
இதற்கிடையில், இன்றும் பாராளுமன்ற வளாகத்தில் பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
$ads={2}
இராஜாங்க அமைச்சர் தயாசிரி ஜயசேகர, பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் மற்றும் அமைச்சர் வாசுதேவ நானாயக்கர ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்தே இவர்களுக்கான பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.