போராட்டக்களத்திற்கு இரவோடு இரவாக சென்ற துணைவேந்தர்; காலையில் நினைவுத்தூபிக்கு அடிக்கல் என வாக்குறுதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

போராட்டக்களத்திற்கு இரவோடு இரவாக சென்ற துணைவேந்தர்; காலையில் நினைவுத்தூபிக்கு அடிக்கல் என வாக்குறுதி!

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திவந்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று (11) காலை முதல் நிறைவுக்கு வந்துள்ளது.

உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள மாணவர்களை யாழ் பல்கலைகழக துணைவேந்தர் சி. சிறிசற்குணராஜா இரவோடு இரவாக அங்கு சென்று சந்தித்தார்.

$ads={2}

இன்று (11) அதிகாலை 3.00 மணியளவில் மாணவர்களின் போராட்ட இடத்திற்கு சென்ற துணைவேந்தர், இடிக்கப்பட்ட அதே இடத்தில் இன்று காலை 7.00 மணிக்கு அடிக்கல் நாட்டுவதாக உறுதியளித்தார்.

இதையடுத்து பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுதூபி இடித்து அழிக்கப்பட்டதற்கு எதிர்ப்பை வெளியிட்டு 3 நாட்களாக போராட்டம் செய்து வந்த மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகம் வழங்கிய வாக்குறுதியை அடுத்தே போராட்டம் நிறைவுக்கு வந்தது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.