இந்தியாவில் வாட்ஸாப் செயலியைத் தடை செய்ய வேண்டும்! வர்த்தகர் சம்மேளனம் வேண்டுகோள்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இந்தியாவில் வாட்ஸாப் செயலியைத் தடை செய்ய வேண்டும்! வர்த்தகர் சம்மேளனம் வேண்டுகோள்!!

வாட்ஸாப் அறிவித்துள்ள புதிய கொள்கைக்கு அகில இந்திய வர்த்தகர் சம்மேளனம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

முகநூலின் சக நிறுவனமான வாட்ஸாப் செயலி உலகெங்கும் மிக மிக அதிக அளவில் பயனில் உள்ளது.  சமீபத்தில் வாட்ஸாப் தனது புதிய கொள்கையை அறிவித்தது. அதன்படி இந்த கொள்கைகளை ஒப்புக் கொள்வோர் மட்டுமே இனி வாட்ஸாப் செயலியைப் பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த கொள்கையை ஒப்புக் கொள்ளாதோர் கணக்குகள் உடனடியாக முடக்கவும் வாய்ப்புள்ளது.

$ads={2}

இந்த புதிய கொள்கையின்படி வாட்ஸாப் மூலம் அனுப்பப்படும் தகவல்கள், செய்திகள், படங்கள், வீடியோக்கள், இருப்பிடங்கள் உள்ளிட்ட அனைத்தும் நிர்வாகத்தால் சேமிக்கப்பட்டு அவை முகநூலுடன் விளம்பர தேவைக்காக பயன்படுத்தப்படவுள்ளது. 

பயனாளிகள் தங்கள் வாட்ஸாப் மொபைலில் இருந்து இவற்றை அழித்தாலும் அது முகநூல் சர்வரில் இருந்து நீக்கப்பட மாட்டாது. இவற்றை முகநூல் பயன்படுத்திக் கொள்ளலாம். 

இந்நிலையில், இதற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இதன் மூலம் ஒரு பயனர் வாட்ஸாப் மூலம் அனுப்பும் அந்தரங்க தகவல்களும் முகநூல் நிர்வாகத்தால் பகிர வாய்ப்புள்ளது. இது ஒருவரது அந்தரங்க உரிமைக்கு எதிரானது எனப் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த அறிவிப்பால் பலர் வாட்ஸாப் செயலியில் இருந்து விலகி டெலிகிராம் போன்ற வேறு செயலிகளுக்கு மாறத் தொடங்கி உள்ளனர்.

இந்நிலையில், அகில இந்திய வர்த்தகர் சம்மேளனம், நேற்று மத்திய அரசு தகவல் ஒளிபரப்புத்துறைக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளது.

$ads={2}

அந்த கடிதத்தில், “எமது சம்மேளனம் வாட்ஸாப் நிறுவன புதிய கொள்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. இதன் மூலம் மக்களின் தனித்துவம் பாதிக்கப்படும். எனவே இந்த விவகாரத்தைத் தீவிரமாக அரசு கருத வேண்டும். உடனடியாக வாட்ஸாப் செயலியை இந்தியாவில் தடை செய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.