உக்ரைன் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவதால் ஆபத்து ஏற்படக்கூடிய சூழ்நிலை இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், 1.1 மில்லியன் கொரோனா தொற்றளர்கள் அடையாளம் காணப்பட்ட உக்ரைன் போன்ற நாட்டிலிருந்து சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவதால் சமூகத்திற்குக் கடுமையான ஆபத்து இருப்பதாக தலதா அத்துகோரல சுட்டிக்காட்டினார்.
உக்ரைன் சுற்றுலாப் பயணிகளைக் அழைத்து வருவதற்கு முன்னர் இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்தார்.