க.பொ.த சாதாரண தரப் பரீட்சை திருத்தப்பணிகளுக்கான விண்ணப்பம் கோரல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை திருத்தப்பணிகளுக்கான விண்ணப்பம் கோரல்!


க.பொ.த சாதாரண தரப்பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணிகளுக்காக பரீட்சைகள் திணைக்களத்தினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.


எதிர்வரும் மார்ச் மாதம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இடம்பெறவுள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இதற்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பங்களை onlineexams.gov.lk என்ற இணையளத்தினூடாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த விண்ணப்பப் படிவங்கள் இணையத்தளமூடாகவே நிரப்பபட்டு அதிபரின் பரிந்துரையுடன் பதிவுத் தபால் ஊடாக அனுப்பபட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


அத்துடன் பரீட்சைகள் ஆணையாளர், பரீட்சைகள் திணைக்களம், பெலவத்த, பத்தரமுல்லை என்ற முகவரிக்கு இதற்கான விண்ணப்பங்களை அனுப்பிவைக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.